Sunday, October 3, 2010

கணனி மயமாகும் யாழ் பொதுநூலகம்.jaffnanet.blogspot.com


ஏனைய பொதுநூலகங்களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ்பொதுநூலகம் முழுமையான கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். தகவல் பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ் நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ: பொதுநூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு;ள்ளது. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம்திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment